» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா

புதன் 1, ஏப்ரல் 2026 8:01:50 PM (IST)



மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனாரை வழிபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 23ம் தேதி நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து விழாவின் 6ம் நாளான மார்ச் 28ம் தேதி மகா அன்னதானம் நடந்தது. இதனைத்தொடர்ந்து 10ம் நாளான இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. 

இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடந்தது. அதனைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு மகா சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 1 மணிக்கு உற்சவ அய்யனார் கற்பக பொற்சப்பரத்தில் எழுந்தருளி மேலப்புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. 

ஏற்பாடுகளை நிர்வாகிகள் குமரகுருபரன், வினோபால், செல்வராஜ், அசோகராஜ், சரவணன், ராமகிருஷ்ணமுத்து, சுந்தரபாண்டியன், சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory