» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில ரூ.60.37 லட்சம் ரொக்கம்; ரூ.3.83 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்!

புதன் 1, ஏப்ரல் 2026 4:20:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 60.37 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று (01.04.2026) வரை மாவட்டத்தில் பறக்கும் படைகள்  மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் வெளியிட்டுள்ளார்.

பறிமுதல் விவரங்கள்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ. 60,37,330 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்குப் புறம்பாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ.3,83,714/- மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சோதனையின் போது பிடிபட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 6,65,600/- ஆகும். தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory