» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 4:54:02 PM (IST)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. காலை 6:30 மணியளவில், வள்ளி அம்பாள் தபசுக்காக கோவிலில் இருந்து புறப்பட்டு, ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.
இன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பாக, சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் வைதீக முறைப்படி கோலாகலமாகத் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஜ்ஜி போட்டு நூதன பிரச்சாரம்: தூத்துக்குடி தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத்திற்கு உற்சாக வரவேற்பு!
புதன் 1, ஏப்ரல் 2026 5:43:19 PM (IST)

கேஸ் சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு: ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்!
புதன் 1, ஏப்ரல் 2026 5:37:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில ரூ.60.37 லட்சம் ரொக்கம்; ரூ.3.83 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்!
புதன் 1, ஏப்ரல் 2026 4:20:42 PM (IST)

சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
புதன் 1, ஏப்ரல் 2026 4:01:03 PM (IST)

கோவில்பட்டியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்!
புதன் 1, ஏப்ரல் 2026 3:49:42 PM (IST)

தேர்தல் விதிமீறல் குறித்து 24மணி நேரமும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்
புதன் 1, ஏப்ரல் 2026 3:43:13 PM (IST)







