» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மார்ச் 18-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்கள் நேர்காணல்: தி.மு.க. தலைமை அறிவிப்பு
திங்கள் 16, மார்ச் 2026 3:11:40 PM (IST)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு மார்ச் 18-ஆம் தேதி (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு ஆகிய இரு மாவட்டப் பிரிவுகளுக்கான நேர்காணலும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. தூத்துக்குடியுடன் இணைந்து அன்றைய காலை அமர்வில் திருநெல்வேலி (கிழக்கு, மத்திய, மேற்கு), தென்காசி (வடக்கு, தெற்கு) மற்றும் கன்னியாகுமரி (கிழக்கு, மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
முன்னதாக, நேர்காணலின் முதல் நாளான மார்ச் 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறும். மார்ச் 18-ஆம் தேதி மாலை 4.00 மணி அமர்வில் மதுரை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: இருசக்கர வாகனம் எரிந்து சாம்பல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:25:46 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: காரில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:02:37 PM (IST)

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 16, மார்ச் 2026 4:50:56 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் - ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 16, மார்ச் 2026 4:19:25 PM (IST)

மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ சோதனை: போலீஸ் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 16, மார்ச் 2026 3:46:56 PM (IST)

துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 16, மார்ச் 2026 3:30:58 PM (IST)








