» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் சிறப்புச் சட்ட விழிப்புணர்வு கூட்டம்
திங்கள் 16, மார்ச் 2026 12:40:02 PM (IST)

திருச்செந்தூரில் பொதுமக்கள் இலவச சட்ட உதவி சங்கத்தின் சார்பில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கான சிறப்புச் சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூரில் அரசு மருத்துவமனை எதிரில் தெய்வா கல்யாண மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்குச் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மாநில கௌரவத் தலைவர் பால்கனகராஜ், தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.ராஜா, மற்றும் மாநில இணைச் செயலாளர் கோ. லிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டச் சிக்கல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தகுந்த சட்ட ஆலோசனைகளை வழங்குவதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் அருள், மாவட்டத் தலைவர் மாரியப்பன் மற்றும் மாவட்டச் செயலாளர் மா.சு. மனோகரன் உள்ளிட்ட சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: இருசக்கர வாகனம் எரிந்து சாம்பல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:25:46 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: காரில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:02:37 PM (IST)

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 16, மார்ச் 2026 4:50:56 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் - ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 16, மார்ச் 2026 4:19:25 PM (IST)

மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ சோதனை: போலீஸ் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 16, மார்ச் 2026 3:46:56 PM (IST)

துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 16, மார்ச் 2026 3:30:58 PM (IST)








