» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் சிறப்புச் சட்ட விழிப்புணர்வு கூட்டம்

திங்கள் 16, மார்ச் 2026 12:40:02 PM (IST)



திருச்செந்தூரில் பொதுமக்கள் இலவச சட்ட உதவி சங்கத்தின் சார்பில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கான சிறப்புச் சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

திருச்செந்தூரில் அரசு மருத்துவமனை எதிரில் தெய்வா கல்யாண மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்குச் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மாநில கௌரவத் தலைவர் பால்கனகராஜ், தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.ராஜா, மற்றும் மாநில இணைச் செயலாளர் கோ. லிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்டச் சிக்கல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தகுந்த சட்ட ஆலோசனைகளை வழங்குவதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் அருள், மாவட்டத் தலைவர் மாரியப்பன் மற்றும் மாவட்டச் செயலாளர் மா.சு. மனோகரன் உள்ளிட்ட சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory