» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
திங்கள் 2, மார்ச் 2026 8:23:14 PM (IST)
தூத்துக்குடி மாநகரில் கொலை முயற்சி மற்றும் போதைப்பொருள் விற்பனை வழக்குகளில் தொடர்புடைய இருவரைத் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (21) என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன் (எ) கட்ட முருகன் (31) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர்களது தொடர் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர்களைத் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் சிறையிலடைக்கச் சிப்காட் மற்றும் தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீசார் நேற்று சுந்தரபாண்டி மற்றும் கட்ட முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!
திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)

நடமாடும் உழவர் சந்தை வாகனங்கள் : ஆட்சியர் க. இளம்பகவத் துவக்கி வைத்தார்!
திங்கள் 2, மார்ச் 2026 4:09:10 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்
திங்கள் 2, மார்ச் 2026 3:37:15 PM (IST)

வெள்ள நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்: பெருங்குளம் பேரூராட்சித் தலைவர் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 3:26:04 PM (IST)

தூத்துக்குடி தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் : பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம்
திங்கள் 2, மார்ச் 2026 3:13:50 PM (IST)

தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் மீது ஊழல் புகார்: பணிநீக்கம் செய்ய இ.ம.க. கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 12:45:27 PM (IST)










