» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் மீது ஊழல் புகார்: பணிநீக்கம் செய்ய இ.ம.க. கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 12:45:27 PM (IST)

தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது பல கோடி ரூபாய் நிதி முறைகேடு புகார்களை முன்வைத்து, அவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் தா. வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி வைகுண்டபதி கோவில் திருப்பணிகளில், ரூ.3.05 கோடி வழங்கப்பட்டும் பணிகள் முடிக்கப்படவில்லை. முறையான திட்டமிடல் இன்றி, உட்பிரகாரப் பணிகள் முடிவதற்கு முன்பே ரூ.80 லட்சம் செலவில் வெளிப்பகுதிகளில் கல் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கோவில் திருப்பணிக்கான மணல் காணாமல் போனது மற்றும் 110-விதியின் கீழ் லஞ்சம் பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியாளர்களை நியமித்தது போன்ற புகார்கள் எழுந்துள்ளன. ஸ்ரீ சங்கர் ராமேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான வணிக நிலத்தை முறைகேடாகக் கையாண்டது தொடர்பாகவும் விசாரணை கோரப்பட்டுள்ளது.
இணை ஆணையரின் இத்தகையச் செயல்பாடுகளால் கோவில் திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் தா. வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி வைகுண்டபதி கோவில் திருப்பணிகளில், ரூ.3.05 கோடி வழங்கப்பட்டும் பணிகள் முடிக்கப்படவில்லை. முறையான திட்டமிடல் இன்றி, உட்பிரகாரப் பணிகள் முடிவதற்கு முன்பே ரூ.80 லட்சம் செலவில் வெளிப்பகுதிகளில் கல் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கோவில் திருப்பணிக்கான மணல் காணாமல் போனது மற்றும் 110-விதியின் கீழ் லஞ்சம் பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியாளர்களை நியமித்தது போன்ற புகார்கள் எழுந்துள்ளன. ஸ்ரீ சங்கர் ராமேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான வணிக நிலத்தை முறைகேடாகக் கையாண்டது தொடர்பாகவும் விசாரணை கோரப்பட்டுள்ளது.
இணை ஆணையரின் இத்தகையச் செயல்பாடுகளால் கோவில் திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
திங்கள் 2, மார்ச் 2026 8:23:14 PM (IST)

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!
திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)

நடமாடும் உழவர் சந்தை வாகனங்கள் : ஆட்சியர் க. இளம்பகவத் துவக்கி வைத்தார்!
திங்கள் 2, மார்ச் 2026 4:09:10 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்
திங்கள் 2, மார்ச் 2026 3:37:15 PM (IST)

வெள்ள நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்: பெருங்குளம் பேரூராட்சித் தலைவர் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 3:26:04 PM (IST)

தூத்துக்குடி தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் : பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம்
திங்கள் 2, மார்ச் 2026 3:13:50 PM (IST)











vetrivelMar 2, 2026 - 05:51:46 PM | Posted IP 172.7*****