» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: மார்ச் 29ல் தொடக்கம் - இன்டிகோ அறிவிப்பு !

திங்கள் 23, பிப்ரவரி 2026 8:24:24 PM (IST)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை வருகிற மார்ச் 29 முதல் தொடங்கும் என்று இன்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான தூத்துக்குடிக்கு, சென்னையில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ புதிய மாலை நேர விமான சேவையை அறிவித்துள்ளது. 

இந்த புதிய சேவையானது வரும் மார்ச் 29 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது பகல் நேரங்களில் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த இரவு நேர சேவை தொடங்கப்படுகிறது.

விமான கால அட்டவணை:

இந்தச் சேவையின் கீழ், விமான எண் 6E 7605 சென்னையில் இருந்து மாலை 6:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7:55 மணிக்குத் தூத்துக்குடியைச் சென்றடையும்.

மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பும் விமான எண் 6E 7606, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து இரவு 8:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9:45 மணிக்குச் சென்னையை வந்தடையும். 

இந்த இரவு நேர விமான சேவை, வேலை நிமித்தமாகப் பயணம் செய்யும் பயணிகளுக்கும், அவசரத் தேவைக்காகச் சென்னை வருபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory