» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீட்டில் விபச்சாரம்: 2 பெண்கள் கைது!
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:16:44 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். 2 பெண்கள் மீட்கப்பட்டுள்னர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector) முத்துராஜா, சிறப்புச் சார்பு ஆய்வாளர் மல்லிகா மற்றும் பெண் போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் நான்கு பெண்கள் இருந்தனர். விசாரணையில், முனீசுவரி (29) மற்றும் அந்தோணியம்மாள் (39) ஆகிய இருவர் இணைந்து, மற்ற இரண்டு பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் போலீசார் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபச்சாரம் நடத்திய முனீசுவரி மற்றும் அந்தோணியம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் 2,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, பிப்ரவரி 2026 9:06:08 PM (IST)

மிரட்டல் அரசியலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது: மேயருக்கு மாவட்ட தலைவர் கண்டனம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:47:41 PM (IST)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: மார்ச் 29ல் தொடக்கம் - இன்டிகோ அறிவிப்பு !
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:24:24 PM (IST)

குரும்பூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: வங்கிக்குப் பூட்டு போட்டு மக்கள் போராட்டம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:34:55 PM (IST)

தூத்துக்குடி அண்ணா சிலை பகுதியில் வேகத்தடை: சமக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:06:07 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம்: மத்திய அமைச்சர் தகவல்
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:07:34 PM (IST)










