» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தங்கை பலி: தந்தையின் கண் முன்னே பரிதாபம்!
சனி 21, பிப்ரவரி 2026 8:50:45 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது, கேரளாவைச் சேர்ந்த அக்காள் மற்றும் தங்கை ஆகிய இரு சிறுமிகள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் பங்களாமேட்டைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (45). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். தனது குலதெய்வக் கோவில் விழாவிற்காகக் குடும்பத்தினருடன் ஒரு வேனில் தூத்துக்குடி வந்திருந்தார். திருச்செந்தூர் செல்லும் வழியில், ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோவிலுக்கு வந்த அவர்கள், அங்கிருந்த தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது சந்திரகுமாரின் மகள்களான அபிநயா (16) மற்றும் மீனாட்சி (12) உட்பட 4 சிறுமிகள் ஆற்றின் ஆழமான பகுதியில் இறங்கியதால் நீரில் மூழ்கித் தத்தளித்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை சந்திரகுமார் நீரில் குதித்து அவர்களை மீட்க முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுமிகளும், சந்திரகுமாரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நீண்ட தேடுதலுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் அபிநயா மற்றும் மீனாட்சியைப் பிணமாக மீட்டனர். ஏரல் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தந்தையின் கண் முன்னாலேயே இரண்டு மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, பிப்ரவரி 2026 9:06:08 PM (IST)

மிரட்டல் அரசியலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது: மேயருக்கு மாவட்ட தலைவர் கண்டனம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:47:41 PM (IST)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: மார்ச் 29ல் தொடக்கம் - இன்டிகோ அறிவிப்பு !
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:24:24 PM (IST)

குரும்பூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: வங்கிக்குப் பூட்டு போட்டு மக்கள் போராட்டம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:34:55 PM (IST)

தூத்துக்குடி அண்ணா சிலை பகுதியில் வேகத்தடை: சமக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:06:07 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம்: மத்திய அமைச்சர் தகவல்
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:07:34 PM (IST)











BabuFeb 21, 2026 - 01:20:02 PM | Posted IP 162.1*****