» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் பொறுப்பேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:57:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவித் தலைமை காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி.மதன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் இன்று பொறுப்பேற்றுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது "காவல்துறை அடிப்படை பணிகள் குற்றம் தடுப்பு, புலனாய்வு பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தப்படும். வருகிற சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற அரசியல் சார்பின்றி தேர்தல் விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்படும்.
பொதுமக்கள் சட்ட விதிமுறைகளை முறைப்படி கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது தனி மனித கடமை. குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றங்களை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செயல்படும் என்று தெரிவித்தார். முன்னதாக மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் திபு மற்றும் ஆறுமுகம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமையொருபாகம் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து புதிய எஸ்பி-யை வரவேற்றனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)









