» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை
சனி 7, பிப்ரவரி 2026 12:57:30 PM (IST)

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி புனித லசால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு, 11-ம் வகுப்பு பயிலும் 80 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: "மாணவர்கள் தற்காலப் போட்டி உலகிற்கு ஏற்ப தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோரின் கஷ்டங்களை உணர்ந்து, படிப்பில் கவனம் சிதறாமல் ஆசிாியர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். கல்வியே உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும் என்றார்.
மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய அமைச்சர், பள்ளிக்கு நவீனத் தொடுதிரை (Touch Screen) வசதியையும் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பள்ளி தாளாளர் பிரிட்டோ, தலைமையாசிரியர் ஜான்பால் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு!
சனி 7, பிப்ரவரி 2026 9:06:58 PM (IST)

கஞ்சா, கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை!
சனி 7, பிப்ரவரி 2026 8:21:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

தூத்துக்குடியில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் : ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
சனி 7, பிப்ரவரி 2026 4:43:15 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகள் : ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!
சனி 7, பிப்ரவரி 2026 4:20:59 PM (IST)










ஆமா ஆமாFeb 7, 2026 - 01:19:25 PM | Posted IP 162.1*****