» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:38:38 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி, குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வந்தார். தனது 2 மகன்களுக்கும் முடிகாணிக்கை செலுத்தினார்.பின்னர் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு ‘செல்பி’ எடுத்தனர்.
பின்னர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எனது 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கை நிறைய கஷ்டங்களையும், போராட்டங்களையும் கொடுத்திருக்கிறது. அதை கடந்து மக்களின் அன்புதான் மனதில் நிற்கிறது. அடுத்து நடிக்கும் புதிய படங்கள் ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் படமாகவும், அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இருக்கும்’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு!
சனி 7, பிப்ரவரி 2026 9:06:58 PM (IST)

கஞ்சா, கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை!
சனி 7, பிப்ரவரி 2026 8:21:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

தூத்துக்குடியில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் : ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
சனி 7, பிப்ரவரி 2026 4:43:15 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகள் : ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!
சனி 7, பிப்ரவரி 2026 4:20:59 PM (IST)










கடவுள் பக்தன்Feb 6, 2026 - 08:49:03 AM | Posted IP 162.1*****