» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடு புகுந்து பெண்ணை துன்புறுத்திய போலீசாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

புதன் 17, டிசம்பர் 2025 7:57:35 PM (IST)

வீடு புகுந்து பெண்ணை துன்புறுத்திய போலீசாருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மகளிர் ஆணையம் உத்தரவு உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் 2021ல் மகளிர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கணவனால் கைவிடப்பட்ட நான், இரு மகள்களுடன் தனியாக வசிக்கிறேன். என் இளைய மகள் மாற்றுத்திறனாளி. உறவினர் அருண் என்பவரை தேடி, இரவு, 11:00 மணிக்கு, ஆண் காவலர்கள் மூவர், என் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டினர்.

ஆடைகளை களைந்து, ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, 15,000 ரூபாயையும், இரு மொபைல் போன்களையும் பறித்துக் கொண்டனர். போதையில் வந்த அவர்கள், மூன்று மணி நேரம் எங்களை துன்புறுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை விசாரித்து, ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு: கணவர் இல்லாமல் வீட்டில் இருந்த பெண்ணை, போலீசார் துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் மனித உரிமைகளை, போலீசார் மீறியுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 

இதை, துாத்துக்குடி மேற்கு காவல் நிலைய எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணனிடம் இருந்து, 1 லட்சம் ரூபாய், காவலர் சரவணக்குமார், ஏட்டு பாண்டியராஜ் ஆகியோரிடம் இருந்து, தலா, 50,000 ரூபாயும் வசூலித்துக் கொள்ளலாம். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory