» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடையன்விளை இம்மானுவேல் ஆலயத்தில் ஐ.எம்.எஸ். மிஷனெரி பிரதிஷ்டை விழா!

புதன் 17, டிசம்பர் 2025 12:09:23 PM (IST)



நாசரேத் அருகே உள்ள இடையன்விளை பரி. இம்மானுவேல் ஆலயத்தில் இந்திய மிஷனெரி சங்க (ஐ.எம்.எஸ்.) மிஷனெரி பிரதிஷ்டை விழா சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஆராதனைக்கு நாலுமாவடி சேகர குருவானவர் ஆபிரகாம் ரஞ்சித் டேரல் தலைமை தாங்கினார். ஐ.எம்.எஸ். குருவானவர் கிறிஸ்டியான், இடையன்விளை சபை ஊழியர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு மிஷனெரி பிரதிஷ்டை ஆராதனைக்கு ஆரம்பமாக ஐ.எம்.எஸ். குருவானவர் சாமுவேல் ரவி ஜெபம் செய்து இறை செய்தியளித்தார்.

குருவானவர் ஆபிரகாம் ரஞ்சித் டேரல் உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஐ.எம்.எஸ். ஊழியம் செய்து வருகிற மிஷனெரி காலேப் ராஜாவை பிரதிஷ்டை செய்து வைத்தார். தொடர்ந்து இடையன்விளை பரி. இம்மானுவேல் ஆலய பரிபாலனக் குழுத் தலைவர் ஏ.எம்.விஜயராஜா செயலாளர் சுதாகர் சைமன்ராஜ், பொருளாளர் ஜெயக்குமார் டேவிட் மற்றும் சபை மக்கள் சார்பில் ஐ.எம்.எஸ். மிஷனெரி காலேப் ராஜாவிற்கு பரிசு பொருட்கள் வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory