» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இடையன்விளை இம்மானுவேல் ஆலயத்தில் ஐ.எம்.எஸ். மிஷனெரி பிரதிஷ்டை விழா!
புதன் 17, டிசம்பர் 2025 12:09:23 PM (IST)

நாசரேத் அருகே உள்ள இடையன்விளை பரி. இம்மானுவேல் ஆலயத்தில் இந்திய மிஷனெரி சங்க (ஐ.எம்.எஸ்.) மிஷனெரி பிரதிஷ்டை விழா சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
ஆராதனைக்கு நாலுமாவடி சேகர குருவானவர் ஆபிரகாம் ரஞ்சித் டேரல் தலைமை தாங்கினார். ஐ.எம்.எஸ். குருவானவர் கிறிஸ்டியான், இடையன்விளை சபை ஊழியர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு மிஷனெரி பிரதிஷ்டை ஆராதனைக்கு ஆரம்பமாக ஐ.எம்.எஸ். குருவானவர் சாமுவேல் ரவி ஜெபம் செய்து இறை செய்தியளித்தார்.
குருவானவர் ஆபிரகாம் ரஞ்சித் டேரல் உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஐ.எம்.எஸ். ஊழியம் செய்து வருகிற மிஷனெரி காலேப் ராஜாவை பிரதிஷ்டை செய்து வைத்தார். தொடர்ந்து இடையன்விளை பரி. இம்மானுவேல் ஆலய பரிபாலனக் குழுத் தலைவர் ஏ.எம்.விஜயராஜா செயலாளர் சுதாகர் சைமன்ராஜ், பொருளாளர் ஜெயக்குமார் டேவிட் மற்றும் சபை மக்கள் சார்பில் ஐ.எம்.எஸ். மிஷனெரி காலேப் ராஜாவிற்கு பரிசு பொருட்கள் வழங்கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










