» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா, புகையிலை வைத்திருந்த வாலிபர் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:21:43 PM (IST)

முறப்பநாடு அருகே கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 1½ கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் சேக் அப்துல்காதர் தலைமையில் சார்பு ஆய்வாளர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் நேற்று வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை விசாரணை செய்ததில் அவர் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் முப்புடாதி (26) என்பதும் அவர் 1 ½ கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் முப்புடாதியை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










