» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா, புகையிலை வைத்திருந்த வாலிபர் கைது!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:21:43 PM (IST)



முறப்பநாடு அருகே கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 1½ கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்  முறப்பாடு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர்  சேக் அப்துல்காதர் தலைமையில் சார்பு ஆய்வாளர்  சங்கரலிங்கம் மற்றும் போலீசார் நேற்று வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை விசாரணை செய்ததில் அவர் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் முப்புடாதி (26) என்பதும் அவர் 1 ½ கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் முப்புடாதியை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory