» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீட்டை திரும்ப பெற வேண்டும்: ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:03:36 PM (IST)

இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீட்டு சட்டத்தை திரும்ப பெற செய்வதற்கு எல்லா முயற்சிகளையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மேற்கொள்ளும் என அதன் முன்னாள் பொதுச் செயலாளர் கே சுவாமிநாதன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறுகையில் "இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நியர் முதலீட்டை கொண்டு வருவதற்காக சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டு நலனுக்கோ, இன்சூரன்ஸ் தொழில் நலனுக்கோ பாலிசிதாரர் நலனுக்காக உகந்தது அல்ல என கருதுகிறோம்.
இந்திய நாட்டின் இன்சூரன்ஸ் 1906 இன்சூரன்ஸ் தேசியம் அமைக்கப்பட்ட போது 16 அன்னிய நிறுவனங்கள் இருந்தன. அவை மக்களுக்கு பாதுகாப்பு தரவில்லை மோசடி செயல்களில் ஈடுபட்டது என்பதை வரலாற்று உண்மை பல அந்நிய நாட்டு 100% அணியின் முதலீட்டை அனுமதிப்பதை பாலிசிதாரர்களின் வருவாயை கபலிகரம் செய்து விடுவார்கள்.
இரண்டாயிரத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்ட அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்பது நிறுவனங்கள் அனைத்தும் வெளியே சென்று விட்டது. தேசிய வலிமை பற்றி அதிகம் பேசக்கூடிய இந்த அரசு 2009 ஆம் ஆண்டு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மூன்றாவது முறை ஆட்சியில் 79 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது 2021 ஆம் ஆண்டு 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேசியம் என்று சொல்லக்கூடிய உலகத்திற்கு இது பொருந்தாது தேசபக்திக்கும் இது பொருந்தாது. இன்சூரன்ஸ் தொழிலில் அந்நிய முதலீட்டை கொன்டு வர எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பிரச்சார இயக்கங்கள் போராட்டத்தை மேற்கொள்வோம். இந்த சட்டத்தை திரும்ப பெற செய்வதற்கு எல்லா முயற்சிகளையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் செய்யும் என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










