» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:46:14 PM (IST)

கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நாளை (டிச.17) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக மின் வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/33/11KV கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை 17.12.2025 (புதன் கிழமை)  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், K.P. தளவாய்புரம், ராமசாமிபுரம் புதூர், கொம்புகாரநத்தம், கலியாவூர் மற்றும் வல்லநாடு நீரேற்றும் நிலையம், செட்டியூரணி, கள்ளன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம் கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், S. கைலாசபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory