» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் கார்த்திகை 5ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள். இன்று கார்த்திகை 5ஆவது சோம வாரத்தையொட்டி தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீவிநாயகா பூஜை, மூல மந்திர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. 

மாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4 மணிக்கு சுவாமிக்கு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. கோவில் பிரதான பட்டர் செல்வம் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory