» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவழக்கில் தேடப்பட்டு வந்த ஆசிரியரை மதுரையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தியாகராஜன் என்ற ஹென்றி (41). இவர் அப்பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த மாதம் 16-ந் தேதி விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் ஹென்றி மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். 

தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வந்ததால், அவரை பிடிக்க விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர் மதுரையில் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று அவரை தனிப்படை போலீசார் பிடித்தனர். 

ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த அவர் தனிப்படையினரிடம் சிக்கினார். அவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசாரிடம் தனிப்படையினர் ஒப்படைத்தனர். அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory