» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

ஆறுமுகநேரியில் மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி கடலோர பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதைதொடர்ந்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் நேற்று கடலோர காவல் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மினிலாரியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கூல் லிப், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 30 மூட்டைகளில் கடத்தி சென்றது தெரிய வந்தது. அந்த மூட்டைகளில் இருந்து ரூ.10லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்களை மினிலாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இதை கடத்தி வந்த ஆறுமுகநேரி ராஜமன்ய புரம் ராஜபாண்டியன் மகன் சாந்தகுமார் (45), அதே பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் அரிகிருஷ்ணன்(48), காசிராஜன் மகன் சங்கர் (34), கோபால்சாமி மகன் மகாலிங்கம் (37), உடன்குடி அருகே உள்ள கொட்டங்காடு ஜெயபாண்டியன் மகன் வசிகரன் (63) ஆகிய 5பேரையும் போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 5பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










