» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி கல்லூரியில் இயற்கை மருத்துவம், யோக அறிவியல் சிறப்பு கருத்தரங்கம்

வெள்ளி 12, டிசம்பர் 2025 5:10:48 PM (IST)



கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர்  கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் அம்சமாக, கோவை ஜெ.எஸ்.எஸ் கல்லூரியின் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் துறை பேராசிரியர் சோபிகா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு உரைகளை வழங்கினர். 

மேலும் அவர் கூறுகையில் ஆரோக்கியமான மற்றும் தரமான தூக்கம் குறித்தும் ஆரோக்கியமான உணவு முறை குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி மாணவி செல்வி. வார்சா உட்பட ஜெ.எஸ்.எஸ் கல்லூரியின் மாணவிகள் மற்றும் எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் மாணவர்-மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக ஆங்கிலத்துறையின் மூன்றாமாண்டு மாணவி கார்த்திகா வரவேற்றார். நிறைவாக ஆங்கிலத்துறையின் இரண்டாமாண்டு மாணவி லாவண்யா நன்றியுரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory