» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது

ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

நாசரேத் பஜார் பகுதியில் பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையிலும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அரிவாளுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் கேவிகே சாமி சிலை அருகில் வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் திரிவதாக நாசரேத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாசரேத் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஐசக் மகாராஜா,ஏட்டு நாராயணசாமி, காவலர்கள் துரைசிங், சாமுவேல்ராஜ் ஆகியோர் நாசரேத் பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அரிவாள் உடன் நின்ற அம்பலச்சேரியில் வசித்து வரும் ஆறுமுகநயினார் மகன் சுடலை என்ற பீலா சுரேஷ் (27) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சுடலை என்ற பீலா சுரேஷ் மீது களக்காடு மற்றும் மூன்றடைப்பு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory