» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!

ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)



திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பரங்குன்றம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி முருகப் பெருமானை அவமதித்ததாக திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டன. அதன்படி, தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே, மாநகர இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பெருமாள் சரவணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், பொதுச் செயலாளர் நாராயண ராஜ், மாவட்ட செயலாளர் சரவணகுமார், மண்டல பொறுப்பாளர்கள் சுதாகர் மாரியப்பன் பழனி ஆண்டி முத்துகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சித்ராங்கதன், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் ராஜ் கண்ணு சிவ முருகா, ஆதித்தன், ராதாகிருஷ்ணன், சத்தியசீலன், உஷா தேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி மாவட்ட துணை கண்காணிப்பாளர் திபு, நகர கண்காணிப்பாளர் மதன், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 52 பெண்கள் உள்பட 276 பேரை கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில்  அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory