» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டு படியில் தவறி விழுந்து வாலிபர் சாவு

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:22:26 AM (IST)

குளத்தூரில் வீட்டு படியில் தவறி விழுந்து காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுலோச்சனா என்ற மனைவி, சுபமாலினி என்ற மகளும் உள்ளனர். நேற்று காலையில் வீட்டிலிருந்த முத்துக்குமார் மனைவியிடம் தலைசுற்றுவதாக கூறியுள்ளார். பின்னர் அவர் வீட்டிலிருந்த படிக்கட்டில் ஏறியபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். 

உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் குளத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அந்தோணிதிலிப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory