» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டு படியில் தவறி விழுந்து வாலிபர் சாவு
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:22:26 AM (IST)
குளத்தூரில் வீட்டு படியில் தவறி விழுந்து காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுலோச்சனா என்ற மனைவி, சுபமாலினி என்ற மகளும் உள்ளனர். நேற்று காலையில் வீட்டிலிருந்த முத்துக்குமார் மனைவியிடம் தலைசுற்றுவதாக கூறியுள்ளார். பின்னர் அவர் வீட்டிலிருந்த படிக்கட்டில் ஏறியபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் குளத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அந்தோணிதிலிப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










