» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாப சாவு

செவ்வாய் 15, ஜூலை 2025 10:04:56 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே மின்சாரம் தாக்கியதில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீபராங்குசநல்லூரை சேர்ந்தவர் காளிதுரை மகன் கேசவகார்த்தீசன் (19). இவர் நெல்லை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து முடித்துள்ளார். காளிதுரை ஸ்ரீபராங்குசநல்லூர் வாய்க்கால்கரை பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை கேசவகார்த்தீசன் புதிய வீட்டு சுவருக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உடல் கருகி படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இருந்தபோதும் அவர் பரிதாபமாக பலியானார். அதனைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory