» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் ஷோரூமில் புகுந்து ஊழியரைத் தாக்கியவர் கைது

செவ்வாய் 15, ஜூலை 2025 8:08:31 AM (IST)

கோவில்பட்டியில் பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3 ஆவது தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமார் (34). கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் பைக் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றுஅவர் பணியில் இருந்த போது, திடீரென உள்ளே நுழைந்த ஒரு நபர் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கினாராம். 

இதைக் கண்ட மற்ற பணியாளர்கள் சப்தம் போடவே, அவர் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடிவிட்டாராம். தாக்குதலில் காயமடைந்த சதீஷ்குமார், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, சதீஷ்குமாரைத் தாக்கிய விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொட்டியபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் முத்தையாவை (31) கைது செய்தனர். ஏற்கனவே ஒரு பிரச்சினையில் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக சதீஷ்குமாரை அவர் அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory