» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உழவர் சந்தையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு

சனி 12, ஜூலை 2025 3:23:59 PM (IST)



கோவில்பட்டி உழவர் சந்தையில் ரோட்டரி சங்கம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி  சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் முத்துக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு மஞ்சப்பை வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். இதில் ரோட்டரி  சங்க நிர்வாகிகள் மாரிச்சாமி, கண்ணன் ராஜேந்திரன், பூல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory