» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் கிராம நிர்வாக அதிகாரி பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 20, ஜூன் 2025 10:58:59 AM (IST)
தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி ஆசிரியர் காலனி ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் வேலுச்சாமி (65), கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் நேற்று காலை தனது சொந்த ஊரான கயத்தார் தெற்கு மயிலோடை கிராமத்திற்கு சென்று உறவினர்களை பார்த்துவிட்டு இரவு தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் மடத்தூர் அருகே வந்து கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்னால் இவரது பைக் மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலம், லாரியை சாலையோரத்தில் நிறுத்திய டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகிலுள்ள பெருநாழி ஊரை சேர்ந்த தர்மர் (25) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










