» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் கிராம நிர்வாக அதிகாரி பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!

வெள்ளி 20, ஜூன் 2025 10:58:59 AM (IST)

தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி ஆசிரியர் காலனி ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் வேலுச்சாமி (65), கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் நேற்று காலை தனது சொந்த ஊரான கயத்தார் தெற்கு மயிலோடை கிராமத்திற்கு சென்று உறவினர்களை பார்த்துவிட்டு இரவு தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.

தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் மடத்தூர் அருகே வந்து கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்னால் இவரது பைக் மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலம், லாரியை சாலையோரத்தில் நிறுத்திய டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகிலுள்ள பெருநாழி ஊரை சேர்ந்த  தர்மர் (25) என்பவரை  போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory