» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரூர் வைஸ்யா வங்கியின் 3-ம் ஆண்டு துவக்க விழா: இலவச மருத்துவ முகாம்

வியாழன் 19, ஜூன் 2025 5:52:26 PM (IST)



விளாத்திகுளத்தில் கரூர் வைஸ்யா வங்கியின் 3-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கரூர் வைஸ்யா வங்கி கிளையின் 3-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வங்கி கிளையில் கவின் போஸ் மருத்துவமனையுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கிளை மேலாளர் நவீன் ஆபிரகாம் தலைமை வகித்தார். மண்டல அலுவலர் ராகுல் பிள்ளை முன்னிலை வகித்தார். 

இலவச மருத்துவ முகாமில் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு இரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, உடல் பருமன் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மண்டல முதன்மை மேலாளர் செந்தில்குமரன் அறிவுறுத்தலின்படி வங்கி பணியாளர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory