» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)

தூத்துக்குடியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிராமிய கலைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு ஆலோசனையின் பேரில், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சார்பில் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம், புதுக்கோட்டை பகுதிகளில் தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தாரை தப்பட்டைகள் முழங்க கிராமிய நடனம், விழிப்புணர்வு பாடல், நாடகம் போன்றவை மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி அனைத்தும் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுசியா, தலைமை காவலர்கள் பொன்னரசி, ராஜ ராஜேஸ்வரி, காவலர்கள் சண்முக பிரியா, மணி செல்வியா, புதுக்கோட்டை பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாமா பத்மினி, உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)

கோவில்பட்டியில் மாரத்தான் போட்டி: தூத்துக்குடி கல்லூரி மாணவர் முதலிடம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:27:28 PM (IST)

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 3:07:14 PM (IST)

மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொடூர கொலை : நண்பர் வெறிச்செயல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:30:43 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:08:10 PM (IST)
