» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: 3 பைக்குகள் பறிமுதல்!
வெள்ளி 23, மே 2025 3:21:28 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாப்பிள்ளையூரணி காமராஜ் பள்ளி அருகேயுள்ள ரோட்டில் சந்தேகப்படும்படியாக பைக்குடன் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனை செய்த போது 30 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பதுதெரியவந்தது.
இது தொடர்பாக திரேஸ்புரம் மாதவன் காலனி யோனஸ் மகன் மரிய ஜெபஸ்டின் (21), முனியசாமி மகன் மாடசாமி (19) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் மாதா நகர் 1வது தெரு அருகே கஞ்சா விற்பனை செய்த மாதா நகரைச் சேர்ந்த சுந்தரம் மகன் சந்தனகுமார் (22), தாளமுத்துநகர் குணசேகரன் மகன் முத்துக்குமார் 19 ஆகிய 2பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் ராமதாஸ் நகரில் உள்ள திருமண மண்டபம் அருகே சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 25 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த குணசீலன் மகன் கனகராஜ் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











NAAN THAANமே 23, 2025 - 07:39:47 PM | Posted IP 172.7*****