» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சாலை விபத்தில் கப்பல் மாலுமி பலி

வியாழன் 22, மே 2025 11:10:27 AM (IST)

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வுபெற்ற கப்பல் மாலுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி எஸ்பிஜி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மரியதாசன் மகன் ஸ்டீபன் (70) இவர் கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று இரவு 9 மணி அளவில் தூத்துக்குடி விஇ ரோடு அந்தோனியார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த பைக் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory