» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப பிரச்சனையில் வாலிபர் வெட்டிக் கொலை : உறவினர் கைது

வியாழன் 22, மே 2025 10:51:40 AM (IST)

திருச்செந்தூரில் குடும்ப பிரச்சனை காரணமாக வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெகதீஷ் (32) என்பவருக்கும் அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் ஜவகர் (32) என்பவருக்கும் குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (மே 21) இரவு ஜெகதீஷ் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஜவகர் வீட்டிற்கு சென்று அவரது வீட்டு வாசலில் வைத்து ஜவஹரிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது ஜவஹருக்கும் ஜெகதீசுக்கும் இடையே  வாய் தகராறு ஏற்பட்டு இதில் ஆத்திரம் அடைந்த ஜவகர், ஜெகதீசனை வெட்டியுள்ளார்.  இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெகதீசன் உயிரிழந்தார்.  மேற்படி கொலை வழக்கு குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் உடனடியாக ஜவகரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக நடந்த இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory