» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை : போலீசார் விசாரணை

வெள்ளி 16, மே 2025 10:48:54 AM (IST)

ஆறுமுகநேரியில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளன் தெருவைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம் மகன் ராஜா (40) இவருக்கு திருமணமாகி முத்துச்செல்வி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் வீட்டில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவருடைய மனைவி தேடி சென்றபோது அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர உடலை மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory