» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.76% தேர்ச்சி : மாநிலத்தில் தூத்துக்குடி மூன்றாவது இடம்!
வெள்ளி 16, மே 2025 10:19:24 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வில் 96.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 308 பள்ளிகளில், 10,347 மாணவர்கள், 11,112 மாணவிகள் என மொத்தம் 21,459 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 9,867 மாணவர்கள், 10,897 மாணவிகள் என மொத்தம் 20,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் நிகழாண்டு 96.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 94.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நிகழாண்டு தேர்ச்சி சதவீதம் 2.37 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 9வது இடம் பிடித்த நிலையில் இந்த ஆண்டு 3வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் உள்ள 308 பள்ளிகளில் 161 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 89 அரசு பள்ளிகளில் 35 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்ன மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)
