» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.76% தேர்ச்சி : மாநிலத்தில் தூத்துக்குடி மூன்றாவது இடம்!
வெள்ளி 16, மே 2025 10:19:24 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வில் 96.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 308 பள்ளிகளில், 10,347 மாணவர்கள், 11,112 மாணவிகள் என மொத்தம் 21,459 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 9,867 மாணவர்கள், 10,897 மாணவிகள் என மொத்தம் 20,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் நிகழாண்டு 96.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 94.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நிகழாண்டு தேர்ச்சி சதவீதம் 2.37 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 9வது இடம் பிடித்த நிலையில் இந்த ஆண்டு 3வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் உள்ள 308 பள்ளிகளில் 161 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 89 அரசு பள்ளிகளில் 35 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்ன மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டினமருதூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கள ஆய்வு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:30:06 PM (IST)

பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:09:24 PM (IST)

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)










