» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழிவு மீன் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் : கிராம மக்கள் 365 ஆவது நாள் போராட்டம்!
வியாழன் 15, மே 2025 4:16:55 PM (IST)

பொட்டலூரணியில் கழிவு மீன் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி 365வது நாள் தொடர் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி பகுதியில் இயங்கி வரும் மூன்று கழிவு மீன் நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுப் புகையினால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக வீடுகளில் குடியிருக்க முடியவில்லை.நச்சுப் புகை காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம், நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன ஏற்படுவதால் அந்த நிறுவனங்களை மூடக்கோரி பொட்டலூரணி ஊர் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில, தொடர் போராட்டம் தொடங்கிய 365 ஆவது நாள் நிகழ்ச்சி பொட்டலூரணியில் போராட்டக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரான சண்முகம் தலைமையில் நடைபெற்றது. பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். இதில், கழிவு மீன்நிறுனங்கள் மூடப்படவேண்டும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னாள் துணை ஆட்சியர் சங்கரலிங்கம், தமிழ்த் தேசியப் பேரவை பொறுப்பாளர் மணிமாறன், தமிழர் நீதிக்கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் அழகுராசன், மக்களதிகாரம் மண்டலப் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். செல்வி தமிழ் ஒளி எழுச்சிப் பாடல் பாடினார்.
தமிழர் கழகத் தலைவர் தமிழ் முகிலன், டங்க்ஸ்டன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நாம் தமிழர் கட்சித் தொகுதிப் பொறுப்பாளர் வைகுண்ட மாரி, மக்களதிகாரத்தைச் சேர்ந்த விஜி, செல்வம், சமூக ஆர்வளர் சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரளான பொது மக்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் போராட்ட முன்னணியாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










