» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வட்டத்தில் ஜமாபந்தி மே 26ல் தொடக்கம் : ஆட்சியர் தகவல்

செவ்வாய் 13, மே 2025 9:50:46 PM (IST)

தூத்துக்குடி வட்டத்தில் ஜமாபந்தி மே 26 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் .இளம்பகவத் தெரிவித்துள்ளார் 

தூத்துக்குடி வட்டத்தில் 1434-ம் ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி)  14.05.2025 முதல் 21.05.2025 வரை நடைபெற இருந்தது. தற்போது, நிர்வாக காரணத்தினால் வருவாய் தீர்வாய தணிக்கை 26.05.2025 முதல் 30.05.2025 வரை கீழ்க்கண்ட விபரப்படி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து   நடைபெற உள்ளது.

கீழத்தட்டப்பாறை குறுவட்டத்திற்கு 14.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது  26.05.2025 அன்று நடைபெறும்.

கீழத்தட்டப்பாறை மற்றும் முடிவைத்தானேந்தல் குறுவட்டத்திற்கு  15.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது  27.05.2025  அன்று நடைபெறும்.

முடிவைத்தானேந்தல் மற்றும் புதுக்கோட்டை குறுவட்டத்திற்கு  16.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது  28.05.2025  அன்று  நடைபெறும்.

புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி குறுவட்டத்திற்கு  20.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது  29.05.2025 அன்று நடைபெறும்

தூத்துக்குடி வட்டத்திற்கு  21.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது  30.05.2025 அன்று நடைபெறும்.

எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்கள், அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலரிடம்  கொடுத்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory