» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காற்றாலை இறக்கை ஏற்றிவந்த லாரி மீது வேன் மோதல்: 12 பெண்கள் உட்பட 15பேர் காயம்!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:27:22 PM (IST)



தூத்துக்குடி அருகே காற்றாலைக்கான இறக்கை ஏற்றி வந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 12 பெண்கள் உட்பட 15பேர் காயம் அடைந்தனர். 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அழகுநாச்சியார் புரத்தில் இருந்து இன்று காலை தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குசாலையில் நாற்று அறுப்பு பணிக்காக 12 பெண்கள் சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த வாகனத்தை அதே ஊரைச் சேர்ந்த சின்னகுருசாமி மகன் காளி மகராஜன் என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த வாகனம் எப்போதுவென்றான் பாலம் அருகே வந்தபோது முன்னால் காற்றாலை இறக்கைகளை ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது அவ்வழியே வந்த டிராவல்ஸ் வேன், சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த டிரைவர் மற்றும் வள்ளியம்மாள் (49), கிறிஸ்டியம்மாள் உட்பட 12 பெண்கள் காயம் அடைந்தனர். 

அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் காற்றாலை இறக்கை ஏற்றி வந்த வாகனத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்த 2 ஊழியர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் எப்போதும் வென்றான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory