» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:26:43 AM (IST)
தூத்துக்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.55ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி வெற்றிவேல் புரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மனைவி சுப்புலட்சுமி (48), இவர் அப்பகுதியில் பலசரக்குகடை மற்றும் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் பின்பு இன்று காலை 8 மணி அளவில் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையில் முன்பு மறைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டு கடை பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.
இதையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மளிகை மற்றும் பேன்சி பொருட்கள், ரூ.30ஆயிரம் ரொக்கம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து சுப்புலட்சுமி அளித்த தகவலின் பேரில் வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










