» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:26:43 AM (IST)

தூத்துக்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.55ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி வெற்றிவேல் புரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மனைவி சுப்புலட்சுமி (48), இவர் அப்பகுதியில் பலசரக்குகடை மற்றும் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் பின்பு இன்று காலை 8 மணி அளவில் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையில் முன்பு மறைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டு கடை பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. 

இதையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மளிகை மற்றும் பேன்சி பொருட்கள், ரூ.30ஆயிரம் ரொக்கம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து சுப்புலட்சுமி அளித்த தகவலின் பேரில் வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory