» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: மேலும் 2பேர் கைது!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 8:58:39 AM (IST)



தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மேலும் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மேட்டுப்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனை செய்த போது 40 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பதுதெரியவந்தது. 

இது தொடர்பாக லூர்தம்மாள்புரம் விமல் ராஜ்  (21), மற்றும் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கதிரவன் (21) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தூத்துக்குடி ஈசிஆர் சாலையில் கஞ்சா வழக்கில் 2பேரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.. அவர்களிடம் இருந்து 2 மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

VR ThoothukudiApr 29, 2025 - 04:29:35 PM | Posted IP 172.7*****

தண்ணி பட்டபாடு விட்பனை நடக்குது பிடித்தது சிலரை தான் இன்னும்வேகமெடுத்தால் முற்றுலுமாக ஒழிக்க முடியும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory