» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நீதிபதிகள் பணியிட மாற்றம் :உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவு

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 8:52:04 AM (IST)

நெல்லை, தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் 77 மாவட்ட நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற  தலைமை பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்துள்ள அறிவிக்கையில் "நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டு நீதிபதியாக இருந்த வி.பத்மநாபன், பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், நெல்லை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிபதியாக இருந்த பன்னீர் செல்வம் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிபதி மற்றும் பணியாளர் இழப்பீடு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மகளிர் நீதிமன்ற (மகிளா நீதிமன்ற) நீதிபதியாக இருந்த மாதவ ராமானுஜம் மதுரை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிபதியாக, தூத்துக்குடி குடும்பநல நீதிமன்ற நீதிபதி வி.சுரேஷ் ஈரோடு மாவட்ட 2-வது கூடுதல் நீதிபதியாக பணியிட மாறுதல் ெசய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இவர்கள் உள்பட மொத்தம் 77 மாவட்ட நீதிபதிகள், பல்வேறு மாவட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory