» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 19பேர் தலைமறைவு குற்றவாளிகள்: நீதிபதிகள் அறிவிப்பு

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 8:48:53 AM (IST)

தூத்துக்குடி நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 19 பேரை தலைமறைவு குற்றவாளிகளாக நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி டேவிஸ்புரத்தை சேர்ந்த முருகன் மகன் நவநீதகண்ணன், பெரியசாமி நகரை சேர்ந்த மருதுபாண்டியன் மகன் மணிகண்டன், பிரையண்ட்நகர் 12-வது தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் செல்வக்குமார், தெப்பக்குளத் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வடிவேல்முருகன், 

போல்டன்புரத்தை சேர்ந்த நம்பிராஜன் மகன் ஆனந்த், சாந்திநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஆனந்த், பிரையண்ட்நகர் 7-வது தெருவை சேர்ந்த சவரிமுத்து மகன் ஜான்சன், லயன்ஸ் டவுனை சேர்ந்த சேசப்பா மகன் ஸ்டாலின், வீரநாயக்கன்தட்டை சேர்ந்த கோபால் மகன் தேவராஜ், சின்னமணிநகரை சேர்ந்த முருகேசன் மகன் விமல்ராஜ், முருகையன் மகன் ராம்குமார், பழனிச்சாமி மகன் மதியழகன், சின்னச்சாமி மகன் கோவிந்தராஜ், 

மேலசண்முகபுரத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் நாராயணன் என்ற நாராயணசாமி, லயன்ஸ்டவுனை சேர்ந்த சேசையா மகன் செல்வம் பர்னாந்து ஆகிய 17 பேரும் கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ளனர். இதனால் அவர்களின் ஜாமீன்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 17 பேரும் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இதனால் 17 பேரும் 2.5.2025 அன்று காலை 10 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் தலைமறைவு குற்றவாளிகள் ஆவர் என்று தூத்துக்குடி 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சுமதி அறிவித்து உத்தரவிட்டு உள்ளார்.

இதே போன்று முத்தையாபுரம் காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த மாங்கையன் மகன் கணேஷ்குமார், ராம்தேவ்ஷா மகன் சுரேன்குமார் ஆகியோர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர். இதனால் அவர்களின் ஜாமீன்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜராகாததால், 2 பேரையும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி கனிமொழி உத்தரவிட்டார். இதனால் தூத்துக்குடியில் 19 பேர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory