» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரகாசபுரம் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை பவனி : திரளானோர் பங்கேற்பு

சனி 26, ஏப்ரல் 2025 8:18:01 PM (IST)



பிரகாசபுரத்தில் பெண்கள் பண்டிகையை முன்னிட்டு நடந்த மாபெரும் பவனியில் திரளானோர் பங்கேற்றனர். 

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சேகரம் பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பெண்கள் பண்டிகை ஆராதனை மற்றும் திரு விருந்து ஆராதனை நடந்தது. சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஆராதனையை நடத்தினார்‌. முதலூரைச்சேர்ந்த பாத்திமா மனுவேல், ஒய்யான்குடி எலிசபெத் சாமுவேல் ஆகியோர் தேவ செய்தி கொடுத்தனர். முன்னதாக பண்டிகையை முன்னிட்டு மாபெரும் பவனி நடந்தது.

பெண்கள் ஐக்கிய சங்க தலைவி பிரிடா நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து பவனியை தொடங்கி வைத்தார். பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு, சாலை தெரு மற்றும் முக்கிய வீதியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலயத்தில் பெண்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஏற்பாடுகளை சேகர தலைவர் நவராஜ், பெண்கள் ஐக்கிய சங்க தலைவி பிரிடா நவராஜ், சபை ஊழியர் ஸ்டான்லி, சங்க செயலாளர் நல்லம்மாள், பொருளாளர் சரோஜா, ஆலய பாடகர் குழு பொறுப்பாளர் இம்மானுவேல், ஆலய பணியாளர் டிக்சன் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory