» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஓவியப் பயிற்சி

சனி 26, ஏப்ரல் 2025 3:32:28 PM (IST)



தூத்துக்குடி தாளமுத்துநகர் மடு ஜெபமாலை மாதா ஆலய முன்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச ஓவியப் பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாளமுத்துநகர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றிய கவுண்சிலர் அந்தோணி தனுஸ் பாலன் மற்றும் தாளமுத்துநகர் வட்டார வியாபாரிகள் சங்க செயலாளர் கிராஸ் பொருளாளர் அந்தோணி செளந்திரராஜ் ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர். முன்னதாக போப் மறைவுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஓவிய ஆசிரியர் ஜெயந்தி சக்திவேல் ஓவியப் பயிற்சி அளித்தார். இந்நிகழ்வில் கலையின் குரல் நிறுவனர் சக்திவேல், குமிழ்மனை புத்தக வாசிப்பு வண்டியின் நிறுவனர் சைமன், புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் செல்வின், அமைப்பாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கலையின் குரல், மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory