» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து இந்து மகா சபா கண்டன ஆர்ப்பாட்டம்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:47:24 PM (IST)

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாசரேத்தில் இந்து மகா சபா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாசரேத்தில் இந்து மகா சபா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சுந்தர் வேல் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர். சேர்மத்துரை முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராம்குமார்வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக சிவசேனா மாநில அமைப்பாளர் சசிகுமார் தூத்துக்குடி இந்து வியாபாரிகள் சங்கம்செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.
மாநில வர்த்தக பிரிவு தலைவர், சக்திகுமார், மாநில இளைஞரணி செயலாளர் ராஜகோபால், சிவசேனா மாவட்டச் செயலாளர் சக்திவேல் மாவட்டத் துணைத் தலைவர்மாரிமுத்து, பவன் மாவட்டச் செயலாளர், வாகன ஓட்டுநர் பிரிவு மாவட்டசெயலாளர் புதியராஜ், ஆறுமுகநேரி நகர தலைவர்சேகர், நாசரேத் நகர தலைவர்செந்தில்வேல், ஒன்றிய செயலாளர் பாலமுருகன், ஆழ்வை ஒன்றிய தலைவர் பாலையா, ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணைத் தலைவர் அண்ணாசாமி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










