» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரி மீது வேன் மோதல்: குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் காயம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:00:16 PM (IST)

தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை பழங்காநத்தம் காளியப்ப பிள்ளை நாடார் தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி (52), இவர் தனது குடும்பத்தினர்கள் 17 பேருடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பேரனுக்கு மொட்டை போடுவதற்காக ஒரு வேனில் வந்தனர். வேனை விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த பரமசிவம் மகன் சரவணகுமார் (52) என்பவர் டிரைவராக ஓட்டி வந்தார்.
சுவாமி தரிசனம் செய்த பின்னர் இன்று மதியம் மீண்டும் மதுரைக்கு செல்வதற்காக வேனில் புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி புதிய துறைமுகம் -மதுரை பைபாஸ் ரோடு, ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த 4 குழந்தைகள், 8 பெண்கள், டிரைவர் உட்பட 18 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










