» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தேர் நிழற்கூடம் அமைக்க கால்கோள் விழா!
புதன் 23, ஏப்ரல் 2025 8:08:51 PM (IST)

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தேர் நிழற்கூடம் அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் நிதி உதவியுடன் தேர் கூடம், இந்திர வாகனம் நிறுத்துவதற்கான நிழற்கூடம் மற்றும் கூட்ட அரங்கம் அமைக்கும் பணிக்கான கால்கோல் விழா இன்று பதி வளாகத்தில் நடைபெற்றது. அய்யா வைகுண்டர் அவதார பதி தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் புதிய நிழற்கூடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தநிழ்ச்சிக்கு செயலாளர் பொன்னுதுரை முன்னிலை வகித்தார்.முன்னதாக கோவிலில் சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அய்யா வைகுண்டர் அவதார பதி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சந்திர சேகரன், ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், பொருளாளர் கோபால் நாடார், துணை தலைவர் அய்யா பழம், இணைத் தலைவர்கள் செல்வின்ஆசிரியர், பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, இணை செயலாளர்கள் வரதராஜ பெருமாள், தங்க கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், சுதேசன், திருநெல்வேலி நாடார் உறவின் முறை சங்க தலைவர் அசோகன், திருநெல்வேலி மாவட்ட டாக்டர் சின்னய்யா நற்பணி மன்ற துணை செயலாளர் அய்யாசாமி, அவதார பதி நிர்வாக குழு உறுப்பினர்கள் கேடிஎம். செல்வக்குமார், பாலகிருஷ்ணன், துவையல் தவசி செல்வகுமார், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் பால்ராஜ், அழகேசன், ஒப்பந்ததாரர் சேகர், வேல்முருகன், பொறியாளர் சோமன்,அசோக்குமார் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










