» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ பேரணி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்
புதன் 23, ஏப்ரல் 2025 3:12:37 PM (IST)

தூத்துக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெற்ற பேரணியை முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் தொடங்கி வைத்தார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, துாத்துக்குடியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்ங்களின் கூட் டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பேரணி நடந்தது.
தூத்துக்குடியில் உள்ள பாளை., ரோடு அம்பேத்கர் சிலை முன்பிருந்து, சிதம்பரநகர் பஸ் ஸ்டாண்ட் வரை பேரணி நடந்தது. பேரணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உமா தேவி, கலை உடையார் தலைமை வகித்தனர் பேரணியை முது நிலைபட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் துவக்கி வைத்தார். இதில் கோரிக்கைகளை விளக்கி, அரசு ஊழியர் சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் வெங்கடேசன், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் பேசினர். மாவட்ட தலைவர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










