» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு அனுமதி வழங்க கோரிக்கை!

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 5:26:02 PM (IST)



தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானை சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்த மனுவில், "வரும் மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். அதற்காக நினைவஞ்சலி கூட்டம் நடத்த நமது கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உள்ள பொதுக் கூட்டத்திடலில் மே-21 அல்லது மே-22 ஆகிய இரு தினங்களில் 3 கால நேரங்களில் ஏதாவது ஒரு நாள் - நேரத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். விவரங்களை கேட்டறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து தகவல் தெரிவிக்கிறோம் என்று கூறியதாக கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

ராஜாApr 23, 2025 - 12:53:38 PM | Posted IP 172.7*****

முயற்சி திருவினையாக்கும் கள போராளிகளே

தூத்துக்குடியான்Apr 23, 2025 - 12:09:01 PM | Posted IP 104.2*****

பாத்திமா மேடம் தலைமை ஏற்பார்களா? அன்றைய கூட்டத்தில் இறந்தோருக்காக பிரார்த்தனை பண்ணவேண்டும் ₹

செ.கைத்தான் கோமஸ்Apr 23, 2025 - 08:41:31 AM | Posted IP 104.2*****

சிறப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory